கஜா புயல் காரணமாக பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து

திருச்சி, நவ.15: கஜா புயல் காரணமாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இன்று (15ம் தேதி) நடை பெறவிருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.  இதுகுறித்து பல்கலைக்கழக தேர்வு நெறியாளர் துரையரசன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் இன்று(15ம் தேதி) பருவத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரத்து செய்யப்பட்ட தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: