மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்

திருச்சி, நவ. 15: திருச்சி காவிரி கரையில் இருந்து குடமுருட்டி பாலம் வழியே மணல் கடத்தப்படுவதாக தேவதானம் பகுதி விஏஓ குமரவேலுவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று முன்தினம் இரவு விஏஓ குமரவேல், குடமுருட்டி பாலம் அருகே சோதனை நடத்தினார். அப்போது அவ்வழியே வந்த மினிலாரியை நிறுத்துமாறு சைகை காட்டியதால் டிரைவர், மினிலாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். மினி லாரியில் நடத்திய சோதனையில் 20  மூட்டைகளில் மணல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்து கோட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்த விஏஓ இதுகுறித்து நடவடிக்ைக எடுக்குமாறு கோட்டை போலீசில் புகார் அளித்தார். எஸ்ஐ அம்சவள்ளி வழக்குபதிந்து விசாரித்து வருகிறார்.

Related Stories: