×

பள்ளியில் குழந்தைகள் தின விழா

தா.பேட்டை, நவ.15:  தா.பேட்டை அடுத்த மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய மாதிரி தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை ஆசிரியை இந்திரா தலைமை வகித்தார். இடைநிலை ஆசிரியர்கள் விஜயகுமார், தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறிவுத்திறன் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள் முன்னாள் பிரதமர் நேரு நாட்டிற்கு ஆற்றிய அரும் பணிகள் குறித்து பேசினர். குழந்தைகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள் சுரேஷ்குமார், சிந்துஜா, ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். குழந்தைகள் தினவிழாவை தொடர்ந்து பெற்றோர், ஆசிரியர் கூட்டம் நடைபெற்றது.

Tags : Children's Day Festival ,School ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி