கல்லணை கால்வாயில் மணல் அள்ளிய வாகனம் பறிமுதல்

திருக்காட்டுப்பள்ளி, நவ. 15:  பூதலூர் கல்லணைக்கால்வாயில் அனுமதியின்றி மணல் எடுத்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பியோடிய டிரைவரை தேடி வருகின்றனர். பூதலூர் கல்லணைக்கால்வாய் பழைய பாலம் அருகில் கல்லணை கால்வாயில் இருந்து நேற்று அதிகாலை ஒரு வாகனத்தில் சிலர் மணல் ஏற்றி கொண்டிருந்தனர். அப்போது பூதலூர் முதல்நிலை காவலர்கள் விஜயகுமார், சரவணன் ஆகியோர் அப்பகுதியில் ரோந்து பணியில் சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் டிரைவர் தப்பியோடிவிட்டார். பின்னர் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன் தப்பியோடிய டிரைவரை சப்இன்ஸ்பெக்டர் கபீர்தாசன் தேடி வருகிறார்.  

Related Stories: