சேதுபாவாசத்திரம் பகுதியில் கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆய்வு

சேதுபாவாசத்திரம், நவ. 15:  கஜா புயல் எதிரொலியாக சேதுபாவாசத்திரம் கடலோர பகுதிகளில் கலெக்டர் அண்ணாதுரை ஆய்வு செய்தார். அப்போது புதுப்பட்டினம், கொள்ளுக்காடு, அதிராம்பட்டினம்,  சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், மனோரா, காரங்குடா, கழுமங்குடா, திருவத்தேவன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து புயல் பாதுகாப்பு மையங்களை தயார் நிலையில் வைத்திருக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இயற்கை பேரிடர்களை சமாளிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பேரிடர் மேலாண்மை கண்காணிப்பு குழுவினருக்கு ஆலோசனை வழங்கினார். இதைதொடர்ந்து தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்குமாறு கலெக்டர் அண்ணாதுரை அறிவுறுத்தினார்.

Related Stories: