இருசக்கர வாகனங்கள் நிறுத்த அதிக கட்டணம் வசூலிப்பு நடவடிக்ைக எடுக்க வலியுறுத்தல் திருவோணம் புதுவிடுதியில் புதிதாக கட்டிய குடிநீர் தொட்டியில் விரிசல் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் அவதி

ஒரத்தநாடு, நவ. 15:  திருவோணம் புதுவிடுதியில் ரூ.8 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட குடிநீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் பற்றாக்குறையால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருவோணம் ஒன்றியம் வெட்டுவாக்கோட்டை, புதுவிடுதி கிராமத்தில் 4 மாதங்களுக்கு முன் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.8.10 லட்சம் செலவில் 30,000 லிட்டர் கொள்ளளவு உள்ள புதிய குடிநீர் தொட்டி கட்டப்பட்டது பயன்பாட்டுக்கு வந்தது.

4 மாதங்களே ஆன நிலையில் புதிய குடிநீர் தொட்டியில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் தொட்டியில் தண்ணீர் நிறுத்தி வைக்க முடியாத அவலநிலை ஏற்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் புதுவிடுதி கிராமத்தில் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை நேரடி விசாரணை செய்து அரசு பணம் ரூ.8.10 லட்சம் ஊழல் செய்யப்பட்டுள்ளதை ஆய்வு செய்து புதுவிடுதி மக்களுக்கு குடிநீர் வழங்கி காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: