தஞ்சை, நவ. 15: தஞ்சை காமராஜர் மார்க்கெட்டில் கடந்த 2 மாதமாக அகற்றப்படாமல் குவிந்து கிடக்கும் காய்கறி கழிவுகளால் ஏற்படும் துர்நாற்றத்தால் பொதுமக்கள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தஞ்சை காமராஜர் மார்க்கெட் மிகவும் பிரதானமான மார்க்கெட் ஆகும். இந்த மார்க்கெட்டுக்கு திருச்சி மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள், வெங்காயம், வாழைப்பழம் வரும். இங்கிருந்து தான் மற்ற இடங்களுக்கு காய்களை வாங்கி சென்று விற்பனை செய்வர். இவ்வாறு மிகவும் பிரதானமாக காமராஜர் மார்க்கெட்டில் கடந்த 2 மாதமாக காய்கறி கழிவுகள் அகற்றப்படாமல் தேங்கி கிடக்கிறது. இதனால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.