கும்பகோணத்தில் ஆண் குழந்தைக்கு பன்றி காய்ச்சல்

கும்பகோணம், நவ. 15:  கும்பகோணத்தில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒரு வயது ஆண் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அடுத்த பாவூரை சேர்ந்தவர் மதியழகன். விவசாயியான இவரது ஒரு வயது மகன் தர்சன். குழந்தை தர்சனுக்கு கடந்த 7 நாட்களுக்கு முன் மர்மகாய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து கும்பகோணத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டான். அங்கு சிகிச்சை அளித்தும் காய்ச்சல் நிற்காததால் மேல்சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் நேற்று காலை தர்சனம் அனுமதிக்கப்பட்டான். அங்கு பரிசோதனை செய்தபோது பன்றி காய்ச்சலால் குழந்தை தர்சன் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனை தனி அறையில் வைத்து ஸ்ரீதர்சனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories: