இடைப்பாடி, நவ.15: சட்டிஸ்கர் மாநிலத்தில் பணியின் போது மாரடைப்பால் உயிரிழந்த மத்திய ரிசர்வ் போலீஸ் எஸ்ஐயின் உடல், அவரது சொந்த ஊரான இடைப்பாடியை அடுத்த மணியகாரம்பாளையத்தில் தகனம் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் இடைப்பாடி அடுத்த வேம்பனேரி மணியகாரம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன்(54). இவர் சட்டிஸ்கர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் போலீசில் எஸ்ஐயாக பணியாற்றி வந்தார். இவருக்கு செல்வி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 12ம் தேதி, பணியில் இருந்த கணேசன் மாரடைப்பால் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல், நேற்று சொந்த ஊரான மணியகாரம்பாளையத்திற்கு கொண்டு வரப்பட்டது.