தம்மம்பட்டி, நவ.15:தம்மம்பட்டி அடுத்த உலிபுரம் அணைக்கட்டு பகுதியில், நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 கூரை வீடுகள் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இதில் கன்றுடன் பசுமாடு எரிந்து பலியானது. தம்மம்பட்டி அருகே உள்ள உலிபுரம் அணைக்கட்டு பகுதியில், நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பழனியம்மாள்(80), ராஜேந்திரன்(55), ராமமூர்த்தி, சுப்ரமணியன் ஆகியோரின் 4 கூரை வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமானது. இதில் ராஜேந்திரனின் என்பவரது வீட்டின் அருகில் கட்டியிருந்த பசு மாடு, கன்றுக்குட்டி தீயில் சிக்கி பலியானது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தம்மம்பட்டி போலீசார், விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.