ஏற்காடு தாலுகாவில் மனுநீதி நாள் முகாம்

ஏற்காடு, நவ.15: ஏற்காடு  தாலுகா வேலூர் கிராமத்தில், நேற்று மனுநீதி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் ரோகிணி  தலைமை வகித்தார். கள்ளக்குறிச்சி எம்பி  காமராஜ், ஏற்காடு எம்எல்ஏ சித்ரா  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முகாமில், அனைத்து துறை அதிகாரிகளும், தங்கள் துறை சார்பில்  செயல்படுத்தப்படும் நலத்திட்டங்கள் குறித்து விளக்கிக்கூறினர். முகாமில்  மலைவாழ் மக்களுக்கான ஜாதிச்சான்று 100 பேருக்கும், முதியோர் உதவித்தொகை  10 பேருக்கும், சூரியசக்தி பசுமை வீடு திட்ட ஆணை 2 பேருக்கும், தேன் சேகரிக்கும் பெட்டி, உயிரி உரங்கள் உள்ளிட்டவை 7 பேருக்கும், கால்நடைக்கான தாது  உப்பு கலவை 10 பேருக்கும், காது கேட்கும் கருவி 2 சிறுவர்களுக்கும்,  மூன்று சக்கர சைக்கிள் ஒருவருக்கும் வழங்கப்பட்டது. முகாமில் வேலூர்  சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டனர். ஏற்காடு தாசில்தார் முருகேசன் நன்றி கூறினார்.

Related Stories: