×

முத்திரைக்கொல்லர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டு 29,30ம்தேதிகளில் வழங்க ஏற்பாடு

சேலம், நவ. 15: சேலத்தில் முத்திரைக் கொல்லர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு நுழைவுச்சீட்டு கிடைக்காதவர்கள் வரும் 29 மற்றும் 30ம்தேதிகளில்  மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) கோட்டீஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பது:
தொழிலாளர் துறையில் கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் மண்டலத்தில் காலியாக உள்ள முத்திரைக் கொல்லர் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு வரும் டிசம்பர் 2ம்தேதி காலை 10 மணி முதல் 12 மணிவரை சேலம் ஜங்ஷன் மெயின்ரோட்டில் உள்ள சோனா காலேஜ் ஆப் டெக்னாலஜி மையத்தில் நடக்கிறது.

தகுதியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் முகவரிக்கு அஞ்சல் மூலமாக எழுத்து தேர்விற்கான நுழைவுச்சீட்டு அனுப்பப்பட்டுள்ளது. நுழைவுச் சீட்டு கிடைக்காத தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், சேலம் ஏற்காடு மெயின்ரோட்டிலுள்ள மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலகத்தில் வரும் 29மற்றும் 30ம்தேதிகளில் நேரில் அணுகி பெற்றுக் கொள்ளலாம். நுழைவுச்சீட்டு பெற, நேரில் வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது, ஏதேனும் ஒரு அடையாள அட்டையுடன், அதன்நகலில் தங்களது பாஸ்போட் அளவு புகைப்படத்தினை ஒட்டி ‘அ’ அல்லது ‘ஆ’ பிரிவு அரசு அலுவலரிடம் சான்றொப்பம் பெற்று வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : stamp collector ,
× RELATED முத்திரை கொல்லர் எழுத்துதேர்வு நுழைவுச்சீட்டு கிடைத்ததா?