×

மோகனூர் அருகே கோயில் திருவிழாவில் மோதல்; 5 பேர் படுகாயம்

நாமக்கல், நவ. 15: மோகனூர் அருகே, கோயில் திருவிழாவில் நடந்த மோதலில் 5 பேர் படுகாயம் அடைந்தனர். நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே, கீழ்பாலப்பட்டி நடுத்தெருவில் உள்ள முருகன் கோயிலில், நேற்று முன்தினம் சூரசம்ஹாரம் நடைபெற்றது. அப்போது, அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் (35), பாலமுருகன் (23) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.இந்நிலையில், கொமாரபாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் (24), மதியரசன் (24), நல்லதம்பி (25) பாலமுருகன் (23) உள்ளிட்டோர் நேற்று மதியம் கோயில் அருகில் வந்து,அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் மீது கல்வீசி தாக்கி டியூப்லைட், சேர்களை அடித்து நொறுக்கினர்.

இதில் டிரைவர் கார்த்தி (26), நரேந்திரன் (23), சபாபதி (40), சிவராமன் (45), நடராஜன் (52) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். இவர்கள் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தகவல் பேரில் விரைந்து வந்த நாமக்கல் டிஎஸ்பி ராஜேந்திரன் மற்றும் போலீசார் இரு தரப்பினருக்கு இடையே தொடர்ந்து மோதல் ஏற்படாமல் தடுத்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்டவர்களை  தேடி வருகின்றனர்.

Tags : Confrontation ,Mohanur ,Temple Festival ,
× RELATED மோகனூர் -வாங்கல் சாலை சோதனைச்சாவடியில் எஸ்பி ஆய்வு