×

திருச்செங்கோடு அருகே குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதி

திருச்செங்கோடு, நவ.15: திருச்செங்கோடு அருகே, குடிநீர் தட்டுப்பாட்டால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். திருச்செங்கோடு அருகே, கொன்னையார் ஆசிரியர் காலனியில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 18 மாதமாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் கிடைக்காமல் அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று தண்ணீர் எடுத்து வரவேண்டி உள்ளது. இதனால் பள்ளி மாணவ, மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதுபற்றி ஊராட்சி மற்றும் நகராட்சி அலுவலர்களிடம் பல முறை முறையிட்டும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

 இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 18 மாதமாக ஆசிரியர் காலனியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதை போக்க ஊராட்சி அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். இதனிடையே, குடிநீர் பிரச்னையை தீர்க்காவிட்டால், பொதுமக்களைத் திரட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலிக்குடங்களுடன் போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

Tags : Tiruchengode ,
× RELATED மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து