×

குழாயை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை கோரி கலெக்டர் அலுவலகம் முற்றுகை


திருப்பூர், நவ.15: குடிநீர் குழாயை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரி கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் நேற்று பரபரப்பு ஏற்பட்டது. செங்காட்டுபாளையம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் தனது நண்பரின் குழந்தையை பைக்கில் நேற்று அழைத்து சென்றார். விநாயகர் கோவில் அருகே வந்த போது அந்த வழியாக வந்த பால்காரர் சிவக்குமார் என்பவர் கார்த்தியின் பைக் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார். இதுகுறித்து கார்த்திக் கேட்டபோது ஊர்க்காரர்களும், சிவக்குமாரும் அவரை தகாத வார்த்தைகளால் திட்டி தாழ்த்தப்பட்டோர் வசிக்கும் பகுதியில் உள்ள குடிநீர் குழாயை உடைத்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி செங்காட்டுபாளையம் பகுதி மக்கள், கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். பின்னர், கலெக்டர் பழனிச்சாமியிடம் மனு அளித்தனர்.

Tags : Collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...