×

வீட்டு பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருட்டு

காங்கயம், நவ.15: காங்கயம் அருகே வீட்டு பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.காங்கயம் அடுத்த ஆலாம்பாடி சென்னிமலைகவுண்டன்வலசை சேர்ந்தவர் சுப்பிரமணியம் (50). விவசாயி. இவர், நேற்று வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் அருகே உள்ள ஆலாம்பாடிக்கு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.திரும்பி வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ.60 ஆயிரம் திருடுபோயிருந்தது. இதுகுறித்து சுப்பிரமணியம் அளித்த புகாரின்பேரில் காங்கயம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது. இதே போல் காங்கயம் தாராபுரம் ரோடு அமராவதி நகரைச் சேரந்தவர் முருகேசன்(52).இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் விசேஷ நிகழ்ச்சிக்கு சென்றிருந்த போது, வீட்டின் பூட்டை உடைந்து, டிராவில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்று குறிப்பிடத்தக்கது. காங்கயம் சுற்று வட்டார பகுதியில் 172 கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டும் தொடர்ந்து திருட்டு நடப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags : theft ,
× RELATED தமிழகத்தில் இரண்டு நாளில் சிலை கடத்திய 11 பேர் கைது