×

பாசன வாய்க்கால் பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் திறக்க வேண்டும்

காங்கயம், நவ.15: எல்.பி.பி., பாசன வாய்க்கால் பகுதிகளில் முறையாக தண்ணீர் திறந்துவிடக்கோரி காங்கயம் வட்டாட்சியரிடம் விவசாயிகள் நேற்று மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:திருப்பூர் மாவட்டத்தில் 18 ஏக்கர் பரப்பளவில், எல்.பி.பி வாய்க்கால் மூலம் பாசனம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு நெல் சாகுபடிக்காக ஆக.1ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இதில், பல ஏக்கருக்கு போதிய தண்ணீர் கிடைக்காமல் நெல் பயிரிநடும் பணி தாமதமாக துவக்கப்பட்டது.

கீழ்பவானி பாசன பகுதியில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது தேவையான அளவு பாசன நீர் கிடைக்காமல் நடவு செய்துள்ள நெற்பயிர்கள் காய்ந்து கொண்டிருக்கிறது. சில தினங்களாக வாய்க்காலில்  தண்ணீர் விடுவதையும் நிறுத்தி விட்டார்கள். கிணறு உள்ளவர்கள் மட்டும் நீர்பாசனம் செய்து வருகின்றனர். மற்ற வயல்கள் காய்ந்து வருகிறது. நெற்பயிரை காப்பாற்ற, உடனடியாக தண்ணீர் தர நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையெனில், மறியல் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED அமைச்சர் முன்னிலையில் பாஜவினர் 100 பேர்...