மனை வரன்முறைப்படுத்தும் முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது

காங்கயம், நவ.15: காங்கயம் நகராட்சியில் அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தும் முகாம் இன்றும், நாளையும் (நவ.15,16) நடக்கிறது.

காங்கயம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளில், கிரயம் செய்த மனைகளை இணையதளம் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்கும், இதுவரை விண்ணப்பிக்காத தனிமனை உரிமையாளர்களும் விண்ணப்பித்து பயன்பெறும் வகையில் இன்றும், நாளையும் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் மனைகளை வரன்முறைப்படுத்தும் முகாம் நடைபெற உள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அனுமதியற்ற மனைகளை வரன்முறைப்படுத்தி கொள்ளலாம் என நகராட்சி ஆனையயாளர் தேவிகா தெரிவித்தார்.

Related Stories: