வேலை வாய்ப்பு முகாம் திருப்பூரில் நாளை நடக்கிறது
திருப்பூர், நவ.15: மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மற்றும் தனியார் துறை சார்பில், திருப்பூரில் நாளை (16ம் தேதி) வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், தனியார்துறை வேலையளிப்பவர்கள் கலந்து கொண்டு பயன்தாரர்களை தேர்வு செய்யவுள்ளனர். இதனால் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள், முதல் முதுநிலை பட்டதாரிகள், ஐடிஐ, டிப்ளமோ படித்தவர்கள், டிரைவர்கள் மற்றும் தையல் பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமிற்கு வரும் போது தங்களது பதிவில் குறைகள் கண்டறியப்பட்டால், அதனை சரிசெய்து கொள்ளலாம் என்றும், கூடுதல் கல்வி பதிவு செய்தல், வேலை வாய்ப்பற்றோர் உதவித் தொகை விண்ணப்பம் பெறுதல் மற்றும் புதுப்பித்தல் செய்து கொள்ளலாம். இத் தகவலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.