×

பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்

ஊட்டி, நவ. 15: டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் பாதிப்புகளை தடுக்கும் வண்ணம் மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக., சார்பில் ஊட்டி நகரில் சேரிங்கிராஸ், மார்க்கெட் வளாகம், ஏ.டி.சி., உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் மூலம் ஊட்டி புறநகர் பகுதிகளான தலைக்குந்தா, பிங்கர்போஸ்ட் பகுதிகளிலும் கசாயம் வழங்கப்பட்டது.

குன்னூர்:  கூட்டுறவு வார விழாவையொட்டி குன்னூரில் நிக்கல்சன் கூட்டுறவு பண்டகசாலை நடத்தும் மலிவுவிலை மருந்தகம் முன்பு கூட்டுறவு சங்க கொடியை இணை பதிவாளர் லோகநாதன் ஏற்றினார். தொடர்ந்து பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் கூட்டுறவுத்துறை சார்பில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.


Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...