×

டெங்கு விழிப்புணர்வு முகாம்

கூடலூர், நவ. 15: ஓவேலி பேரூராட்சியில் பெரியார்நகர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் டெங்கு விழிப்புணர்வு செயல்விளக்க முகாம் செயல் அலுவலர் வேணுகோபால் தலைமையில் நடந்தது. தொடர்ந்து டெங்கு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த களப்பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. பிறகு பேரூராட்சி ஊழியர்கள் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.  இந்நிகழ்ச்சியில் டெங்கு கொசு ஒழிப்பு, நோய் வராமல் தடுப்பது குறித்தும் பள்ளிக் குழந்தைகளுக்கு கை கழுவும் விதம் குறித்தும் பேரூராட்சியின் மூலம் செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.  இறுதியில் பேரூராட்சி தலைமை எழுத்தர் ஹரிதாஸ் நன்றி கூறினார்.

Tags : Dengue Awareness Camp ,
× RELATED தேனி கருவேல்நாயக்கன்பட்டியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம்