ஈரோடு, நவ. 15: ஈரோடு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் நல்லசிவம் அறிக்கை: நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பவானிசாகர் சட்டமன்ற தொகு திதிமுக நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் சத்தியமங்கலத்தில் கோபி ரோட்டில் உள்ள 16ம்தேதி (நாளை) காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் சரவணன் தலைமை தாங்கவுள்ளார். இதில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர் மற்றும் அணி அமைப்பாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள கேட்டுக் கொண்டுள்ளார்.