முத்திரை கொல்லர் பணிக்கான எழுத்து தேர்வு

ஈரோடு, நவ. 15:  ஈரோடு தொழிலாளர் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:  கோவையில் உள்ள தொழிலாளர் துறை, கூடுதல் தொழிலாளர் ஆணையர் மண்டலத்தில் காலியாக உள்ள முத்திரை கொல்லர் பணியிடத்திற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதற்கான எழுத்து தேர்வு கோவை அவிநாசி ரோட்டில் உள்ள நவ இந்தியா பஸ் ஸ்டாப் அருகில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வரும் 2ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் தபால் மூலமாக எழுத்து தேர்வுக்கான ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டுள்ளது.  ஹால் டிக்கெட் பெறாத தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள், ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றின் நகலுடன், பாஸ்போர்ட் போட்டோ ஒட்டி அரசு துறையை சேர்ந்த ‘அ’ அல்லது ‘ஆ’ அலுவலரிடம் கையெழுத்து பெற்று, வரும் 29 மற்றும் 30ம் தேதி ஈரோடு சென்னிமலை ரோடு அரசு ஐடிஐ பின்புறம் உள்ள மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகத்தில் நேரில் ஹால் டிக்கெட் பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: