×

திங்களூர், ஈரோடு மாநகரில் 16, 17ம் தேதி மின்நிறுத்தம்

ஈரோடு, நவ. 15:  திங்களூர் துணை மின்நிலையத்தில் 16ம்தேதி (நாளை) மாதாந்திர பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பெருந்துறை கோட்டத்தை சார்ந்த திங்களூர், கிரேநகர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், பட்டக்காரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், நடுவலசு, கோமையன்வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு, மம்முட்டிதோப்பு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதே போல் ஈரோடு துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் 17ம்தேதி நடைபெறவுள்ளது. இதனால்  அன்று காலை  9 மணி முதல் மாலை 5 மணி வரை ஈரோடு நகர் முழுவதும், சூரம்பட்டிவலசு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, பெருந்துறை ரோடு, டீச்சர்ஸ் காலனி, சம்பத்நகர், வெட்டுக்காட்டுவலசு, மாணிக்கம்பாளையம், ஆண்டிக்காடு, பாண்டியன்நகர், சக்திநகர், வக்கில் தோட்டம், பெரியசேமூர், திருமால்நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியார்நகர், சத்திரோடு, கே.என்.கே.ரோடு, நேதாஜிரோடு, காந்திஜிரோடு, ஈவிஎன் ரோடு, மேட்டூர்ரோடு ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படவுள்ளது.குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து வாகனங்கள் மூலம் ஊட்டி புறநகர் பகுதிகளான தலைக்குந்தா, பிங்கர்போஸ்ட் பகுதிகளிலும் கசாயம் வழங்கப்பட்டது.

குன்னூர்:  கூட்டுறவு வார விழாவையொட்டி குன்னூரில் நிக்கல்சன் கூட்டுறவு பண்டகசாலை நடத்தும் மலிவுவிலை மருந்தகம் முன்பு கூட்டுறவு சங்க கொடியை இணை பதிவாளர் லோகநாதன் ஏற்றினார். தொடர்ந்து பன்றி காய்ச்சல் மற்றும் டெங்கு ஆகியவற்றை தவிர்க்கும் வகையில் கூட்டுறவுத்துறை சார்பில் மக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

Tags : city ,Thingalur ,Erode ,
× RELATED ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை தொடர்ந்து...