ஊட்டி, நவ. 15: ஊட்டி அரசு மருத்துவமனை சாலையில் இருந்த அபாயகரமான மரங்கள் வெட்டி அகற்றும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில் பருவமழை சமயங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்புகள், குடியிருப்பு சேதமடைதல் போன்ற இடர்பாடுகள் ஏற்படுகின்றன. சில சமயங்களில் அபாயகரமான மரங்கள் விழுந்து உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. இந்நிலையில் தென்மேற்கு பருவமழையின் போது மரம் விழுந்ததில் 3 பேர் பலியானார்கள்.