×

இலவச வீட்டுமனை பட்டா திட்டத்திற்கு நிலம் வழங்க அழைப்பு

ஊட்டி, நவ. 15: நீலகிரி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்திற்கு நிலம் எடுக்கப்பட உள்ளது. நிலம் கொடுக்க முன் வருபவர்கள், ஊட்டியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தை அணுகலாம். மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:நீலகிரி மாவட்டத்தில் 2018-19ம் ஆண்டிற்கு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் வகுப்பின மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்திற்கு தனிநபர் நேரடி பேச்சுவார்த்தை மூலம் நிலம் எடுக்கப்படுகிறது. இத்திட்டத்தில் சாலை வசதியுள்ள நிலங்கள் தேவை. இந்நிலங்களுக்கு வழிகாட்டி மதிப்பின் படி நில மதிப்பு நிர்ணயம் செய்யப்படும். ஒரு ஏக்கருக்கு ரூ.3 லட்சம் அளவில் சுமார் மூன்று ஏக்கர் நிலம் ேதவைப்படும்.

இத்திட்டத்தின் கீழ் தங்கள் நிலங்களை அரசுக்கு கொடுக்க முன்வரும் நில உரிமைதாரர்கள் பிங்கர்போஸ்ட் பகுதியில் அமைந்துள்ள கூடுதல் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி தங்கள் நிலங்களுக்கான ஆவணங்களின் நகல்களை கொடுத்து அரசுக்கு நிலம் கிரயம் கொடுப்பது தொடர்பான பேச்சுவார்த்தையை மேற்கொள்ளலாம்.

Tags : land ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...