அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோவை,நவ.15: கோவை மாவட்டத்தில்  அம்பேத்கர் விருதுக்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்க மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்ட தமிழ் அறிஞர்கள், கவிஞர்கள் மற்றும் தமிழ் சான்றோர்களுக்கு ஜனவரி மாதம் 2019ம் ஆண்டு திருவள்ளுவர் பிறந்தநாள் விழாவின் போது அண்ணல் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது. மேற்படி விருதுக்கு 2018 -2019ம் ஆண்டிற்கு கோவை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.  எனவே, தகுதியான நபர்கள் தங்களின் சாதி சான்றிதழ், புகைப்படம், கல்வி தகுதி, வகித்த பதவி, பெற்ற அரசு விருது, நூல்கள், கட்டுரை விபரங்கள், மற்றும் 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் சாதனைகள், தற்போது ஆற்றி வரும் பணிகள், சமுதாய பணிகள், வாழ்க்கை குறிப்பு போன்ற விபரங்களுடன் கோவை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அலுவலகத்தில் வரும் 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: