பெண் தவறவிட்ட 32 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

உடுமலை, நவ.15: உடுமலையில் பெண் தவற விட்ட 32 பவுன் நகையை போலீசில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

உடுமலை யுகேபி நகரை சேர்ந்தவர் சரவணன் (45). நூல் வியாபாரி. இவர் தனது மனைவி லட்சுமி பிரபாவுடன் காரில் திருப்பூரில் உறவினர் வீட்டு திருமணத்துக்கு சென்றார். திரும்ப வரும்போது, லட்சுமி பிரபா தான் அணிந்திருந்த 32 பவுன் நகையை கழற்றி பையில் போட்டு வைத்திருந்தார். தளி ரோடு பூமாலை சந்து அருகே காரை விட்டு இறங்கும்போது நகை பையை தவறவிட்டார். இது லட்சுமி பிரபாவுக்கு தெரியவில்லை.

வீட்டுக்கு வந்த பார்த்தபோது நகையை காணவில்லை. இந்நிலையில், அவ்வழியே வந்த அன்புநகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிகண்டன்(29), நகை பையை பார்த்ததும் அதை எடுத்து போலீசில் ஒப்படைத்தார். அந்த நகை லட்சுமி பிரபாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆட்டோ டிரைவரின் நேர்மையை இன்ஸ்பெக்டர் ஓம்பிரகாஷ், எஸ்ஐ சிவகுமார் ஆகியோர் பாராட்டினர்.

Related Stories: