×

தொற்றுநோய் வராமல் தடுக்க கை கழுவும் முறை செயல்விளக்கம்

இலுப்பூர், நவ.15: இலுப்பூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பள்ளி மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவுதலை தடுக்கும் விதமாக கைகளை சுத்தம் செய்தல் பற்றி கை கழுவும்முறை குறித்து செயல் விளக்கம் இலுப்பூர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது.  இதையொட்டி டெங்கு காய்ச்சலை தடுக்கும் விதமாக  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு கசாய குடிநீர் வழங்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் ஆசாராணி மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கினார். பின்னர் தொற்று நோய் பரவுதலை தடுக்கும் விதமாக கைகளை சுத்தம் செய்தல் பற்றியும், கை கழுவும் முறை குறித்தும் பேரூராட்சி பணியாளர்கள் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர். இந்நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியை சுதா, ஆசிரியைகள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...