×

பள்ளியில் குழந்தைகள் தினவிழா

பொன்னமராவதி, நவ.15:  பொன்னமராவதி அருகே உள்ள திருக்களம்பூர் அண்ணாநகர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. தலைமையாசிரியர் கவிதா தலைமை வகித்தார். இதில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு இனிப்பு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு வேடங்கள் அணிந்து வந்த மாணவ, மாணவிகள் முன்னாள் பிரதமர் நேருவைப் பற்றி பேசினர். இதில் ஆசிரியர்கள் ராசு உள்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னமராவதி அலமேலு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் குழந்தைகள் தின விழா நடந்தது. விழாவிற்கு வட்டாரக்கல்வி அலுவலர்  ராமதிலகம் தலைமை வகித்தார்.

வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். பொறியாளர் மனோகரன், எல்ஐசி வளர்ச்சி அலுவலர் முரளிதரன், ஆசிரியர் பயிற்றுநர்கள்ர ரஹிமாபானு, அழகுராஜா, பள்ளி மேலாண்மைக்குழு தலைவி ராஜம்மாள் ஆகியோர் குழந்தைகள் தினம் பற்றி பேசினர். மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, பாடல், கவிதை, மாறுவேடம், ஆடல், பட்டிமன்றம் போன்ற போட்டிகள் நடத்தினர். தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு  கிராமக்கல்விக்குழு தலைவர் ராஜா பரிசு வழங்கினார். தலைமையாசிரியர் அல்போன்ஸா வரவேற்றார். ஆசிரியர் விஜயசுதா நன்றி கூறினார்.

Tags : school ,Children's Day ,
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி