மணமேல்குடி, நவ.15: கஜாபுயல் எச்சரிக்கையால் புதுக்கோட்டை மாவட்ட கடலோர பகுதிகளில் திருச்சி சரக டிஐஜி பவானி ஆய்வு மேற்கொண்டார். வங்கக்கடலில் அந்தமான் அருகே கஜா புயல் உருவாகி உள்ளது. இதையடுத்து கடற்கரை மாவட்டங்களுக்கு கூடுதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் புயல் முன்ெனச்சரிக்கை நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் நேற்று திருச்சி சரக டிஐஜி பவானி தலைமையில் புதுக்கோட்டை எஸ்பி செல்வராஜ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் கட்டுமாவடி, மணமேல்குடி, கோடியக்கரை, கோட்டைபட்டினம், மீமிசல் ஆகிய கடற்கரை பகுதிகளுக்கு சென்று ஆய்வு
மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில், கடலோர பகுதிகளில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. காப்பகங்கள் தயார் நிலையில் உள்ளன. கடலோரத்தில் வசிப்பவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. புயலை எதிர்கொள்ள அனைத்து முன்னேற்பாடுகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர். ஆய்வின்போது இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் நகர போலீசார் கடலோர போலீசார் கலந்து கொண்டனர்.