×

முன்னாள் பிரதமர் நேரு பிறந்தநாள் சிலைக்கு காங்கிரஸ் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை

கரூர், நவ. 15: முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கரூர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் கமிட்டி சார்பில் சோமூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்களுக்கு இனிப்புகள், விளையாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரம் நடும் விழாவும் நடத்தப்பட்டன. கரூர் மாவட்ட தலைவர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வர்த்தக பிரிவு தலைவர் சதீஸ்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் மணி, நகரத் தலைவர் சவுந்திரராஜன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். இதே போல், தாந்தோணி வட்டார காங்கிரஸ் சார்பில் கோவிந்தம்பாளையத்தில் உள்ள நேருவின்  சிலைக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், முன்னாள் தலைவர் பேங்க் சுப்ரமணியன் உட்பட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Tags : party ,Congress ,Nehru ,birthday ,
× RELATED நாட்டு மக்கள் மரணம் அடைந்த பிறகும் வரி...