மனைவிக்கு கொலை மிரட்டல் கணவன் அதிரடி கைது.

சின்னசேலம், நவ. 15: கள்ளக்குறிச்சி அருகே மேலூர் கிராமத்தை சேர்ந்தவர் வசந்தி(37). இவருக்கும்  உலகங்காத்தான் இந்திரா நகர் பகுதியை சேர்ந்த தமிழ்மணி(41) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு 16, 14 வயதில் இரு மகன்கள் உள்ளனர். தமிழ்மணிக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன் கணவன் மீது கோபித்துக்கொண்டு வசந்தி தாய்வீட்டிற்கு சென்று விட்டார். இந்நிலையில் சம்பவத்தன்று தமிழ்மணி மேலூர் கிராமத்திற்கு சென்று மனைவியை குடும்பம் நடத்த அழைத்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி, வசந்தியை அசிங்கமாக திட்டி தாக்கி கொலை மிரட்டல் செய்துள்ளார். இதில் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து சின்னசேலம் காவல் நிலையத்தில் வசந்தி புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்தியின் கணவன் தமிழ்மணியை கைது செய்தனர்.

Related Stories: