போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

திருக்கோவிலூர். நவ. 15:  திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது பிளஸ் 2 மாணவி சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்தபோது, பல்லரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்த டிப்ளமோ படித்து விட்டு சென்னையில் வேலை பார்த்து வந்த சரவணன் மகன் சரண்ராஜ்(19) என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்து மாணவியின் தாய் திருக்கோவிலூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சரண்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: