விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தள்ளிவைப்பு

விழுப்புரம், நவ. 15: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் 16ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. இதனிடையே நிர்வாக காரணங்களால் இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 23ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுத்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.  

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் விழுப்புரம், நவ. 15: விழுப்புரம் புதிய பஸ் நிலையத்தில் தாறுமாறாக நிறுத்தப்படும் பைக்குகளால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.

விழுப்புரம் புதிய பஸ் நிலையம் கடந்த 2000ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தில் ஒன்றாகவும் திகழ்கிறது.

ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் நேரடியாக பேருந்து வசதியை கொண்டுள்ளது. தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய பேருந்து நிலையமாக இருப்பதால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படிப்பட்ட பேருந்து நிலையத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் போதுமானதாக இல்லை. துர்நாற்றம் வீசக்கூடிய சுகாதாரமற்ற முறையில் இப்பேருந்து நிலையம் காணப்படுகிறது. வாகனங்களிடம் வரி வசூலிக்கப்பட்டும், கடைகளுக்கு வாடகை வருவாய் கிடைத்த போதிலும் இப்பேருந்து நிலையம் சீரமைக்கப்

படாமல் உள்ளது. பயணிகள் நடந்து செல்லும் நடைபாதைகளை பலர் கடைகளை வைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதனிடையே சென்னை, புதுச்சேரி, கடலூர் மார்க்க நடைபாதைகளில் தற்போது இருசக்கர வாகனங்கள் நிறுத்தி நடைபாதைகளை முழுமையாக ஆக்கிரமித்துள்ளனர். இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் உட்காரவும், நிற்கவும் இடமில்லாமல் தவித்து வருகின்றனர். மேலும் பேருந்து நிலையத்தில் நகர பேருந்துகள் வந்து செல்லும் இடத்திலும், நிற்கும் இடத்திலும் பைக்குகளை நிறுத்தி ஆக்கிரமித்துக் கொள்வதால் பேருந்துகள் வந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் பயணிகள் நடந்து செல்ல வழியில்லாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஏற்கனவே இதுபோன்று நிறுத்தப்பட்ட வாகனங்களை எஸ்பி ஜெயக்குமார் நேரடியாக சென்று அவைகளை அகற்றினார். தொடர்ந்து அங்கு வாகனங்கள் நிறுத்தாமல் இருக்கவும், புறக்காவல் நிலைய போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். தற்போது புறக்காவல் நிலையம் எதிரிலேயே பைக்குகள் நிறுத்தப்பட்டு பேருந்து நிலையம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்படட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: