சிட்பண்ட்ஸ் ஊழியர் வீட்டில் ₹1 லட்சம் நகை கொள்ளை

நெய்வேலி, நவ. 15:நெய்வேலி அருகே பட்டப்பகலில் தனியார் சிட்பண்ட்ஸ் ஊழியர் வீட்டில் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். நெய்வேலி அடுத்த சக்திநகரை சேர்ந்தவர் அய்யப்பன் (48). தனியார் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை பிடிஆர் நகரில் உள்ள முருகன் கோயிலில் சாமி கும்பிட மனைவியை அழைத்து சென்றார். பின்பு அவர் அங்கிருந்து வேலைக்கு சென்றார். இதையடுத்து அவரது மனைவி 11 மணிக்கு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன் பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்பு வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது கொள்ளையர்கள் பீரோவை திறந்து 5 பவுன் நகைகள், ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்று இருப்பது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாகும். இது தொடர்பாக நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் அய்யப்பன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டப்பகலில் வீடு புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள். நெய்வேலி பகுதியில் கடந்த ஒரு மாதமாக அடுத்தடுத்து கொள்ளை சம்பவம் நடந்து இருப்பது மக்களை பீதியடைய செய்துள்ளது.

Related Stories: