செஞ்சி, நவ. 15: விழுப்புரம் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்(50). சம்பவத்தன்று இவர் சூரப்பட்டு தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அன்னியூரில் இருந்து சூரப்பட்டு நோக்கி வந்த மொபட், நின்று கொண்டிருந்த குப்பன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் மொபட்டை ஓட்டி வந்த தமிழ்மணி படுகாயம் அடைந்தார். இது குறித்து குப்பன் மகன் மனோகர் கஞ்சனூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.