உளுந்தூர்பேட்டை, நவ. 15: விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் கிராமத்தை சேர்ந்தவர் கலியமூர்த்தி(60). இவர் சம்பவத்தன்று உளுந்தூர்பேட்டை அருகே உள்ள வ.பெரியகுப்பத்தில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்துள்ளார். மீண்டும் விழுப்புரம் செல்வதற்காக பேருந்து நிறுத்தம் பகுதியில் நின்று கொண்டு இருந்தபோது அந்த வழியாக உளுந்தூர்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி சென்ற இருசக்கர வாகனம் கலியமூர்த்தி மீது மோதியது. இதில் தலையில் படுகாயம் அடைந்தஅவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து திருநாவலூர் காவல்நிலையத்தில் பிரபு(32) கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகோபால் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.