×

தொண்டி கடற்கரை பகுதியில் புயல் காப்பகமும் தயார் ;அதிகாரிகளும் தயார்

தொண்டி, நவ.15: தொண்டி மற்றும் சுற்றுவட்டார கடற்கரை பகுதியில் கஜா புயல் எச்சரிக்கை காரணமாக புயல் காப்பகம் மற்றும் அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.
கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணிகள் தயார் நிலையில் உள்ளது. தொண்டி கடற்பகுதி மற்றும் நம்புதாளை கடற்கரை பகுதியில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும், புயல் வரும் பட்சத்தில் மக்களை தங்கவைக்க புயல் காப்பகம் தயார் நிலையில் உள்ளது.

மேலும் உணவு பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகிறது. சேதத்தினை தடுக்கும் வகையில் 200க்கும் மேற்பட்ட மணல் மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. திருவாடானை தாசில்தார் சேகர் மற்றும் அதிகாரிகள் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags : storm ,beach ,
× RELATED மிக்ஜாம் புயல் வெள்ளத்தால்...