புதுச்சேரி, நவ. 15: மரக்காணம், முகையூர், செங்கோதையம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மகன் சக்திவேல் (23). ஜிப்மர் எதிரே உள்ள கேண்டீனில் பணியாற்றி வருகிறார். இவர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வானூர், பூத்துறையைச் சேர்ந்த ரபித்தா என்பவரை காதலித்து திருமணம் செய்தார். தற்போது புதுச்சேரி, காமராஜர் சாலையில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்தனர். சம்பவத்தன்று இரவு குடித்துவிட்டு வீடு திரும்பிய கணவரை, மனைவி ரபித்தா கண்டித்துள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், ரபித்தா தனது தாய் வீட்டிற்கு சென்றாக கூறப்படுகிறது. இதனால் விரக்தியடைந்த சக்திவேல்வீட்டில் தூக்குபோட்டு இறந்தார். இதுகுறித்து கோரிமேடு போலீசார் வழக்குபதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.