புதுச்சேரி, நவ. 15: புதுச்சேரி, வேல்ராம்பேட், நடுத்தெருவில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. அங்குள்ள பாழடைந்த சமுதாய நலக்கூட கட்டிடத்தில் இம்மையம் இயங்கி வரும் நிலையில் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அங்கு அனுப்பி வைக்க தயங்கி வருகின்றனர். இந்த கட்டிடத்தை சுற்றிலும் குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் சுகாதாரமற்ற சூழல் நிலவுகிறது. மேலும் இரவு நேரங்களில் அங்கு சமூக விரோதிகளின் நடமாட்டம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கு வசதியாக அங்கு காம்பவுன்ட் சுவரும் இடிந்த நிலையில் கிடக்கிறது. இதன் காரணமாக அப்பகுதிக்கு செல்வதற்கே பெண்கள் அச்சப்படுகின்றனர். இதன் காரணமாக அங்கன்வாடியில் குழந்தைகளின் எண்ணிக்கையும் முற்றிலுமாக குறைந்துவிட்டது.