காலாப்பட்டு, நவ. 15: புதுவை காலாப்பட்டு அடுத்த பிள்ளைச்சாவடி கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுப்ரமணி மகன் சுரேஷ் (35). மீன் பிடி தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம், வீட்டில் இருந்து பிள்ளைச்சாவடிக்கு ஈசிஆர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, சாலையில் தடுமாறி விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை புதுவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து அவரது தாயார் பொம்மி அளித்த புகாரின் பேரில் காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.