வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து

திண்டுக்கல், நவ. 15: சென்னையில் நவம்பர் 9, 10 தேதியில் மாநில அளவிலான ரோலர் ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங் போட்டி நடந்தது. இதில் பிரிஸ்டைல், பிகர், இன் லைன் பிரிஸ்டைல், சோலோ டான்ஸ், போர் ஸ்கேட்டிங், பேர் டான்ஸ் ஆகிய போட்டிகள் நடந்தன. திண்டுக்கல் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 ஆர்ட்டிஸ்டிக் ஸ்கேட்டிங் வீரர்கள் 29 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். 6-8 வயது ஆண்கள் பிரிவில் அக்ஷத்ராஜன் 3 தங்கம், 1 வெள்ளி, அத்வைத் 1 தங்கம் 1 வெள்ளி பதக்கம் வென்றனர். 8-10 வயது ஆண்கள் பிரிவில் நித்திலன் 2 வெள்ளி பதக்கமும், பெண்கள் பிரிவில் உத்ராராஜன் 3 தங்கம் 1 வெள்ளி பதக்கம் வென்றனர். 10-12 வயது ஆண்கள் பிரிவில் வருண்குமார் 2 தங்கம், 1 வெள்ளி பதக்கமும், யுவன்கார்த்திக் 3 தங்கம், 1 பதக்கம், பெண்கள் பிரிவில் கிரியா 1 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கல பதக்கமும், நாகசஞ்சனா 2 வெள்ளி பதக்கமும் வென்றனர்.

14-16 வயது ஆண்கள் பிரிவில் ஹரிஹர வள்ளியப்பன் 1 தங்கம், 1 வெள்ளி பதக்கம் வென்றார். 16 வயதுக்கு மேற்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஆதிஈஸ்வர் 1 தங்கம், 1 வெள்ளி பதக்கமும், யஷ்வந்த் 1 தங்க பதக்கமும் வென்றனர். மொத்தம் 6 பிரிவுகளில் திண்டுக்கல் வீரர்கள் 16 தங்கம் 12 வெள்ளி 1 வெண்கல பதக்கங்களை வென்றனர். இவர்களுக்கு திண்டுக்கல் ஆர்ட்டிஸ்ட்க் ஸ்கேட்டிங் கிளப் தலைவர் கதிரேசன், செயலாளர் ராம்தாஸ்னி, பயிற்சியாளர் பவன்குமார் மற்றும் ரோலர் ஸ்கேட்டிங் அசோசியேஷன் தலைவர் ரமேஷ், செயலாளர் ராஜகோபால் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

Related Stories: