அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி, நவ. 15:  புதுவை அரசு துறைகளில் காலி பணியிடங்களை நிரப்பக்கோரி இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுச்சேரியில் 7500க்கும் மேற்பட்ட அரசு துறை காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தடை செய்யப்பட்ட கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும். அழகு நிலையங்களில் நடக்கும் விபச்சாரத்தை தடுத்திட வேண்டும். பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். துணை தலைவர் பெருமாள், துணை செயலாளர் ரூவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அந்தோணி நோக்கவுரை ஆற்றினார். இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் சலீம், பொருளாளர் ரவீந்திரன், பெருமன்ற செயலாளர் எழிலன் ஆகியோர் விளக்க உரையாற்றினர். இதில் இளைஞர்கள் பலர் கலந்து ெகாண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

Related Stories: