வேடசந்தூர், நவ. 15:வேடசந்தூரில் கரூர் பாராளுமன்றத்துக்கு உட்பட்ட திமுக தொகுதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஓட்டன்சத்திரம் எம்எல்ஏவும், மேற்கு மாவட்ட செயலாளருமான கொறடா அர.சக்கரபாணி தலைமை வகித்தார். தலைமை செயற்குழ உறுப்பினர் முன்னாள் துணை சபாநயகர் காந்திராஜன், ஒன்றிய செயலாளர்கள் சாமிநாதன், சீனிவாசன், கவிதாபார்த்திபன், சுப்பைய்யா மாவட்ட துணை செயலாளர்கள் ராஜாமணி, ஜெசிலூர்துமேரி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன், நகர செயலாளர்கள் கார்த்தி, கணேசன், சம்பத், கருப்பணன், உமாசந்திரன் முன்னிலை வகித்தனர்.