புதுச்சேரி, நவ. 15: புதுவையில் காலியாக உள்ள 7,500க்கும் மேற்பட்ட அரசுத்துறை பணியிடங்களை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு மாநிலத் தலைவர் ராமராஜா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பெருமாள், துணை செயலாளர் ரூவியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் அந்தோணி நோக்கவுரையாற்றினார். இதில் சிபிஐ மாநில செயலாளர் சலீம், பொருளாளர் ரவீந்திரன், இளைஞர் பெருமன்ற செயலாளர் எழிலன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அப்போது பெட்ேரால்- டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.