பிறந்தநாளுக்கு துணிமணி வாங்கி கொடுக்காததால் சிறுமி தற்கொலை

புதுச்சேரி, நவ. 15:  முத்தியால்பேட்டையில் பிறந்தநாளுக்கு துணிமணி வாங்கிக் கொடுக்காததால் மனமுடைந்த சிறுமி தூக்குபோட்டு இறந்தார். புதுவை, முத்தியால்பேட்டை, செயின்ட் சைமன்பேட், கார்மேல் மடத்து வீதியில்  வசிப்பவர் விஜயபாலன், மீனவர். இவரது மகள் ராகிணி (17). பிளஸ்1ல் தேர்ச்சி  பெறாத இவர் கடந்த 3 மாதங்களாக தையல் வேலைக்கு சென்று வந்ததாக  கூறப்படுகிறது.இதனிடையே தீபாவளியையொட்டி ராகிணிக்கு அவரது பெற்றோர்  துணிமணிகள் வாங்கிக் கொடுத்துள்ளனர். சில தினங்களுக்கு முன்பு அவருக்கு  பிறந்தநாள் வந்த நிலையில், பொருளாதார சூழல் காரணமாக மீண்டும் புதிய துணி  வாங்கிக் கொடுக்கவில்லை. சம்பவத்தன்று அவரது அண்ணனுக்கு புதிய துணி  வாங்க பெற்றோர் காசு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சிறுமி  ராகிணி வீட்டு பாத்ரூமில் துப்பட்டாவால் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.  இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: