சென்னை: சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் ஐடிஎம்ஐ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: கல்வியில் பின்தங்கிய சிறுபான்மையின மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களில் அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வண்ணம் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் ஐடிஎம்ஐ என்ற திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உட்கட்டமைப்பு வசதிகளான வகுப்பறை, அறிவியல் கூடம், கணினி அறை, நூலகம், கழிப்பறை, குடிநீர் வசதிகள், விடுதிகள் மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை மேம்படுத்தும் திட்ட மதிப்பீட்டு தொகையில் 75 சதவீதம் அல்லது அதிகபட்சம் 50 லட்சம் இதில் எது குறைந்ததோ அத்தொகை கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.