பூந்தமல்லி: சென்னை வளசரவாக்கம் அடுத்த ராமாபுரம், ராம் நகரை சேர்ந்தவர் சவுந்தரராஜன் (35). இவரது மனைவி தாரணி (22). இருவரும் அதே பகுதியில் உள்ள தனியார் பாத்திர கம்பெனியில் வேலை செய்கின்றனர். சவுந்தரராஜன் அடிக்கடி குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவிக்குள் வழக்கம் போல தகராறு ஏற்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் தாரணி அலறும் சத்தம் கேட்டது. உடனே அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அப்போது, தாரணி உடலில் தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. உடனடியாக தீயை அணைத்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.