போதையில் பிடிக்க முயன்றபோது விபரீதம் பாம்பு கடித்த வாலிபர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை சூளைமேடு சத்யா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கார்த்திக் (30). நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு கார்த்திக் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பு பாம்பு சென்றுள்ளது. போதையில் இருந்த கார்த்திக் அதை பிடிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடிக்காதே என்று எச்சரித்துள்ளனர்.

ஆனால் போதையில் இருந்ததால் யாருடைய பேச்சையும் கேட்காமல் கார்த்திக் பாம்பை பிடித்துள்ளார். இதில் பாம்பு பலமாக அவரது கையை கடித்துள்ளது. வலி தங்க முடியாமல் பாம்பை விட்டுவிட்டு அலறினார். அருகில் இருந்தவர்கள் கார்த்திக்கை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Related Stories: