சென்னை: சென்னை சூளைமேடு சத்யா நகரை சேர்ந்தவர் மணி. இவரது மகன் கார்த்திக் (30). நேற்று முன்தினம் இரவு 1.30 மணிக்கு கார்த்திக் குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பு பாம்பு சென்றுள்ளது. போதையில் இருந்த கார்த்திக் அதை பிடிக்க முயன்றார். அப்போது அருகில் இருந்தவர்கள் பாம்பை பிடிக்காதே என்று எச்சரித்துள்ளனர்.